Latest topics
More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …
Comments: 0
டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …
Comments: 0
Search
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கிறீர்களா? ரிசர்வ் வங்கி புது உத்தரவு அமல்
2 posters
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: வணிகம் (Business) :: வியாபாரம் / வர்த்தகம் (Business / Trade)
Page 1 of 1
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கிறீர்களா? ரிசர்வ் வங்கி புது உத்தரவு அமல்
புதுடில்லி : ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போது, பணம் வராமல் தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டால், அந்தத் தொகையை, புகார் கொடுத்த ஏழு நாட்களுக்குள் வங்கிகள் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் கையிருப்பு எவ்வளவு என பார்த்தாலும், அதுவும் இலவச பரிமாற்றத்தில் ஒன்றாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்களின் வங்கி சார்ந்த ஏ.டி.எம்.,களில் மட்டுமல்லாது, பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்கலாம். அதாவது மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இப்படி பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒரு முறைக்கு 20 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், தங்களது வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்தால், அதற்கு கட்டணம் எதுவும் கழிக்கப்பட மாட்டாது. மேலும், இலவசமாக அனுமதிக்கப்பட்ட ஐந்து பரிமாற்றங்கள் கணக்கிலும் இது வராது.
ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தான் வைத்திருக்கும் வங்கி அல்லாது பிற வங்கியின் ஏ.டி.எம்.,யை மாதத்தில் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்தாலும், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தாலும் அது இலவச பரிமாற்றத்தில் கழிக்கப்பட்டு விடும்.
பணம் எடுப்பது, இருப்புத் தொகை எவ்வளவு என பார்ப்பது என, எந்த வகையில், அடுத்த வங்கி ஏ.டி.எம்.,யை பயன்படுத்தினாலும், அதற்கு ஐந்து முறை மட்டுமே இலவச அனுமதியுண்டு. அதற்கு மேல் பயன்படுத்தினால், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், பணம் எடுக்காமல் மற்ற வகையான நடவடிக்கைகளை அதாவது கையிருப்பு பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது, பின் நம்பரை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.8.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், இலவச பரிமாற்றங்கள், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாற்றங்கள் இன்று முதல், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். இது மட்டுமின்றி, அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் போது, பணம் வராமல், தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டதால், அந்தத் தொகையை வாடிக்கையாளர் புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் அவரது கணக்கில் சம்பந்தப்பட்ட வங்கி வரவு வைக்க வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை.
அது மாற்றப்பட்டு, இனி புகார் கொடுத்த ஏழு நாட்களுக்கும் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பணத்தை வரவு வைக்க ஏழு நாட்களுக்கு மேல் ஆனால், வாடிக்கையாளருக்கு வங்கியானது 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முற்பட்டு, பணம் வராமல் போய், 30 நாட்களுக்குள் புகார் கொடுத்தால் மட்டுமே இந்த விதிமுறை அமலாகும்.
மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போதும், அவருக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் மூலம் வங்கி செய்தி அனுப்ப வேண்டும். தற்போது குறிப்பிட்ட அளவு பெரிய தொகைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இனி, எந்த அளவு தொகை எடுத்தாலும் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Courtesy : Dinamalar.com
Re: ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கிறீர்களா? ரிசர்வ் வங்கி புது உத்தரவு அமல்
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%27%20%E0%AE%8F.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=442156&SectionID=129&MainSectionID=129&SectionName=Tamilnadu&SEO=&utm_source=twitterfeed&utm_medium=facebook
வாடிக்கையாளர்களை "வாட்டி வதைக்கும்' ஏ.டி.எம். மையங்கள்
கொ. காளீஸ்வரன்
First Published : 06 Jul 2011 04:17:28 AM IST
Last Updated :
மதுரை: வங்கிகளில் நீண்டநேரம் காத்திருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், வீதிகள்தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் குளிர்சாதன வசதியோ, இருப்புத் தொகை தொடர்பான காகித அச்சுப் பிரதி வசதியோ, போதிய வெளிச்சமோ இல்லாமல், வாடிக்கையாளர்களை வதைக்கும் மையங்களாக தற்போது மாறி வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 44 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கிளைகள் 314 இடங்களில் உள்ளன. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், காசோலைகளை வங்கியில் எளிதாக செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏ.டி.எம். (தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம்) மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பிலும் சுமார் 300 ஏ.டி.எம். மையங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. ஒரு மையத்தில் ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருப்பு வைக்க முடியும்.
ஏ.டி.எம். மையம் என்றால் முற்றிலும் குளிரூட்டப்பட்டு இருக்க வேண்டும். ஏ.டி.எம். அட்டை வைத்துள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்த பின்னர் அவர்கள் எடுத்தத் தொகை, மீதமுள்ள தொகை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவை குறித்து காகித அச்சுப் பிரதி, போதிய விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், முக்கியக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு, சாதாரண மக்களும் எளிதாக மையங்களில் பணம் எடுத்துச் செல்வது, 24 மணி நேர சேவை உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும், இந்த வகையான மையங்கள் செயல்பட வேண்டும்.
ஆனால், நகரில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் கேமிரா பொருத்தாதது, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் தொடர்பான அறிவிப்புப் பலகை இல்லாதது, பயிற்சி பெற்ற காவலாளிகள் நியமிக்கப்படாதது போன்ற குறைபாடுகள் உள்ளதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பல ஏ.டி.எம். மையங்களில் குளிர்சாதன வசதி இல்லை. சில மையங்களில் கேமிரா பொருத்தியிருந்தாலும், மையத்துக்குள் போதிய விளக்கு வசதி இல்லை.
இதனால், மையத்துக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் உருவம் தெளிவாக கேமிராவில் பதிவாவதில்லை என்ற புகார், போலீஸ் சார்பில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையெல்லாம்விட, இந்த ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது கள்ள ரூபாய் நோட்டுகள் வந்தால், அந்த நோட்டுகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் வாங்க மறுக்கின்றன என்ற புகாருக்கும், இதுவரை எந்த வங்கி அதிகாரிகளிடமிருந்தும் உரிய பதில் இல்லை.
மேலும், திடீர் மின்வெட்டு நேரத்தில், ஏ.டி.எம். மையங்கள் தடையின்றி இயங்குவதற்கான எவ்வித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லை. எனவே, இதுபோன்ற நேரத்தில் "இன்வெர்ட்டர்' மூலம் மின்சாரம் பெற்று தானாக
இயந்திரம் செயல்படும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, வாடிக்கையாளர்கள் சிரமமப்படாமல் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட வங்கிகளின் பிரதான பொறுப்பாகும்.
ஆனால், ஏ.டி.எம். மையங்கள் "அவுட்சோர்ஸிங்' அடிப்படையில் தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதால், அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்டுகொள்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், ஏ.டி.எம். மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும், அவசரமாக வெளியூர் செல்ல நேரிடும்போது, இதுபோன்ற மையங்களில் வாடிக்கையாளர் ஒருவர் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத மின்தடையால் மிஷினில் அட்டை மாட்டிக்கொள்கிறது போன்ற பிரச்னைகளுக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.
இப்பிரச்னை குறித்து, மதுரை மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் செயல்பட வேண்டும் என்று, மாதந்தோறும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஏ.டி.எம். மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, அந்தந்த வங்கிகளின் பொறுப்பு.
கள்ளநோட்டு கண்டுபிடிப்பு மற்றும் கிழிந்த நோட்டுகளைத் தவிர்க்கும் இயந்திரம் மூலம் உரிய சோதனை செய்த பின்னரே, இயந்திர பாக்ஸில் பணம் வைக்கப்படுகிறது.
இருந்தபோதிலும், கள்ள நோட்டுகள் வந்தால் உரிய ஆதாரத்துடன் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும், ஏ.டி.எம். மையங்களில் அடிப்படை வசதி இல்லை என்றாலும், வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலும் புகார் செய்யலாம் என்றார்.
எனினும், வாடிக்கையாளர்களை வாட்டி வதைக்காமல், அவர்கள் நலன் கருதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
=
உண்பது நாழி; உடுப்பது நாலு முழம்
G. Soundara Rajan
G. Soundara Rajan- Posts : 10
Join date : 2011-06-11
Similar topics
» சமச்சீர் கல்வி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
» பெரியாறு, வைகை அணைகளிலிருந்து ஜூன் 14-ல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு
» சமச்சீர் கல்வி திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பெரியாறு, வைகை அணைகளிலிருந்து ஜூன் 14-ல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு
» சமச்சீர் கல்வி திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: வணிகம் (Business) :: வியாபாரம் / வர்த்தகம் (Business / Trade)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Wed Jul 20, 2011 8:56 am by Admin
» More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
» ஹனிமூனுக்காக ஆஸ்திரியா பறந்த கார்த்தி - ரஞ்சனி ஜோடி!
Tue Jul 19, 2011 8:51 am by Admin
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
» போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
Tue Jul 19, 2011 8:39 am by Admin
» ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Tue Jul 19, 2011 8:33 am by Admin
» Today's Market Rate 15/07/2011
Sat Jul 16, 2011 10:13 am by Admin
» GSat-12 Launched Successfully
Sat Jul 16, 2011 9:46 am by Admin
» 108 Ambulance
Sat Jul 16, 2011 9:42 am by Admin
» ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
Tue Jul 12, 2011 5:17 pm by G. Soundara Rajan